Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் கலைஞர் சாலையில் மதன் செல்வக் குமார் என்பவர் லேப்டாப் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை வைத்து நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற மதன் இன்று காலையில் கடைக்கு வந்தார்.அப்போது கடையின் ஷட்டரின் இரு பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது.இதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து மதன் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு விற்பனைக்கு வைத்திருந்த புதிய மற்றும் பழைய லேப்டாப்கள் மவுஸ் கீ போர்டு என எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட, 4,லட்சம் மதிப்புள்ள பொருட்களை,மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து மதன் கொடுத்த புகாரின் பேரில் பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.